Saturday, January 12, 2013

வறுமை படைத்த பெருமை


வறுமை படைத்த பெருமை
அப்போது இந்தியாவில் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பான் கிராமத்தில் கடுமையான ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஓபராய். ஆறு மாதத்தில் தந்தையை இழந்தார். கல்வி கற்க வசதி இல்லை. இளம் வயதில் திருமணம்.
சிம்லாவில் ஓர் ஓட்டலில் வேலை. மாதச் சம்பளம் 40 ரூபாய்.சம்பளம் உயர்ந்து நூறாகியது. ஓட்டல் அனுபவம் கூடியது. கான்ட்ராக்ட் அடிப்படையில் ஓர் ஓட்டலை ஆரம்பித்தார். தன்னிடமிருந்த அத்தனையையும் விற்று ஒரு நொடிந்த ஓட்டலை வாங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து ஓட்டல்கள். உலகில் இன்று எல்லாப் பகுதிலும் ஓபராய் ஓட்டல்கள்.கோடீஸ்வரர் என்று சாதனை படைத்தார்.
வறுமையும் பசியும் சிலரைச் சிந்திக்கத் துண்டியுள்ளது. வறுமையும் பசியும் தொடர்வது அறியாமையாலும், முயலாமையாலும் என்று தெரிந்து கொண்டவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் சுகமான வாழ்வை அடைந்துள்ளார்கள்.
ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ. அத்தனை கடினமானது.

No comments:

Post a Comment