சீனப் பெருஞ்சுவரைச் சந்திரனிலிருந்து பார்த்தாலும்
பூமியில் தெரியும் மிகப் பெரிய அதிசயம் என்பார்கள். எட்டு மீட்டர் உயரமும் நான்கு
முதல் ஐந்து மீட்டர் அகலம் கொண்ட இப்பெருஞ்சுவரைச் சீன மக்கள் எதிரிகளிடம்
தங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டி முடித்தார்கள். பல ஆண்டுகள், பலருடைய உழைப்பில்
உருவானது இந்த பெருஞ்சுவர். இந்தப் சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்ததும் மக்கள்
அளவில்லாத மகிழச்சி கொண்டார்கள். இனி எதிரிகள் தங்கள் நாட்டுக்கு வர முடியாது
என்று கருதினார்கள். ஆனால் சில நாட்களிலேயே எதிரிகள் நாட்டில் ஊடுருவி
விட்டார்கள். காரணம், வாயிற்காவலில் நின்ற சீன நாட்டுக் காவலர்களுக்கு லஞ்சம்
கொடுத்து இவர்கள் ஊடுருவி விட்டார்கள்.
நேர்மையில்லாதவர்கள் எல்லா இடங்களிலும் விரவியுள்ளதால் தான்
இன்று உலகில் வன்முறையும் அதன் விளைவான அச்சமும் தலைவிரித்தாடுக்கிறது தன்
நலனுக்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்கள் மன்னிக்க இயலாத குற்றவாளிகள். ஆனால்
இவர்களையும் மனம் மாற்றிட வேண்டியது நல்ல அரசின் பொறுப்பு.
சுயநலம்,பேராசை,
கோழைத்தனம் முதலானவைகள் தான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்ம எதிரிகள்.
ஷேக்ஸ்பியர்.
<��n<�ҩ
@k�
e='mso-spacerun:yes'> ஷேக்ஸ்பியர்.