Friday, December 21, 2012

போர்டு(ford) போட்ட போடு



மோட்டார் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற தொழில் அதிபர் போர்டு (ford) இங்கிலாந்து சென்றிருந்த சமயம் தனது தொழிற்சாலையில் தயாராகும் போர்டு கார்களைப் பயன்படுத்தாமல் ரோல்ஸ்ராய் காரரைப் பயன்படுதிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற தனது கம்பெனி காரை விடுத்து வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்தும் இவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள் மக்கள். அச்சமயம் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற போர்டை நோக்கி இங்கிலாந்து அரசர் “தாங்கள் வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?” என்றார் அதற்கு. போர்டு “உலகெங்கிலுமுள்ள மக்கள் எங்கள் தொழிற்சாலையின் கார்களைத்தான் விரும்பி வாங்குகிறார்கள் எனவே எங்கள் தொழிற்சாலையில் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு விற்று விடுகிறார்கள். எங்கள் நிறுவனத் தொழிலாளர்களுக்கு முதலாளியின் தேவையைவிட வடிகையாளர்களின் தேவையே முக்கியம்” எனக் கூறினார் போர்டு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் புரிந்தது.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களும், விசித்திரமாகச் செயல்படுபவர்களும், சாதுர்யாமாகப் பேசுபவர்களும் பல சாதனைகளைச் செய்துள்ளது வரலாறு.

எப்படிப்பட்ட மனிதரிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொல்லாம்,கூர்ந்து கவனித்தால்!

No comments:

Post a Comment